கைதியைப் பார்க்க வந்தவரிடம் கஞ்சா பறிமுதல்

திருச்சி மத்திய சிறையிலிருக்கும் கைதி ஒருவரைப் பார்க்க வந்தவர் வைத்திருந்த 18 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதோடு, அந்த நபரும் கைது செய்யப்பட்டார்.
Updated on
1 min read

திருச்சி மத்திய சிறையிலிருக்கும் கைதி ஒருவரைப் பார்க்க வந்தவர் வைத்திருந்த 18 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதோடு, அந்த நபரும் கைது செய்யப்பட்டார்.
திருச்சி முதலியார்சத்திரத்தைச் சேர்ந்தவர் தர்மா என்கிற தர்மராஜ் (26).  இவர் மத்திய சிறையிலிருக்கும் கைதி ஒருவரைப் பார்ப்பதற்காக சனிக்கிழமை சிறை வளாகத்துக்கு வந்துள்ளார். அப்போது இவரை சோதனையிட்ட போது, இரு பொட்டலங்களில் 18 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து சிறை வளாகத்தில் பணிபுரியும் ரமேஷ் அளித்த புகாரின் பேரில், கே.கே.நகர் காவல் ஆய்வாளர் சகாய அன்பரசு வழக்குப்பதிந்து,  தர்மா என்கிற தர்மராஜை கைது செய்தனர்.  மேலும் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com