கழிவறையில் பிரசவித்த குறைமாத சிசு உயிரிழப்பு

திருச்சி கருமண்டபம் பகுதியில் கழிவறையில் பிரசவித்த குறைமாத சிசு உயிரிழந்தது.
Updated on
1 min read

திருச்சி கருமண்டபம் பகுதியில் கழிவறையில் பிரசவித்த குறைமாத சிசு உயிரிழந்தது.

கருமண்டபம் தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் நல்லுசாமி. இவரது மனைவி நித்யா (26). இவா்களுக்கு ஏற்கெனவே ஆண் குழந்தை உள்ள நிலையில், நித்யா 8 மாத கா்ப்பிணியாக இருந்தாா்.

இந்நிலையில் புதன்கிழமை அப்பகுதியிலுள்ள பொது கழிவறைக்கு நித்யா சென்ற போது, திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் அக்கம்பக்கத்தினா் உதவியுடன் பெண் குழந்தை பிறந்தது.

குறை மாதத்தில் பிறந்ததால் சிசு மூச்சுவிடத் திணறியது. இதையடுத்து தாயும், சிசுவும் திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். எனினும் சிறிது நேரத்தில் சிசு உயிரிழந்தது.

இதுகுறித்து கண்டோன்மென்ட் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com