காட்டுப்புத்தூர் அருகே பொதுமக்கள் சாலை மறியல்
By DIN | Published On : 01st April 2019 09:14 AM | Last Updated : 01st April 2019 09:14 AM | அ+அ அ- |

திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூர் அருகே குடிநீர் கோரி, பொதுமக்கள் காலிக்குடங்களுடன் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தொட்டியம் ஒன்றியத்திலுள்ள ஸ்ரீராமசமுத்திரத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. காவிரிக் கூட்டுக்குடிநீர்த் திட்டத்தின் கீழ், சுற்றுப்புறங்களிலுள்ள 25-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டாலும், இக்கிராமத்துக்கு போதிய அளவில் குடிநீர் விநியோகிக்கப்படவில்லையாம்.
இதனால் அதிருப்தியடைந்த மக்கள், கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்கான நீரேற்றும் நிலையத்தை ஞாயிற்றுக்கிழமை பூட்டி, காட்டுப்புத்தூர்- மாயனூர் சாலையில் ஸ்ரீராமசமுத்திரம் பேருந்து நிறுத்தப் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த காட்டுப்புத்தூர் போலீஸார், வருவாய்த்துறை பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, விரைவில் போதியளவில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.