பறிமுதல் செய்யப்பட்ட 5 டன்  குட்கா அழிப்பு

திருச்சியில் கடந்த சில மாதங்களாக பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 5 டன் குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் திங்கள்கிழமை அழிக்கப்பட்டன.
Updated on
1 min read

திருச்சியில் கடந்த சில மாதங்களாக பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 5 டன் குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் திங்கள்கிழமை அழிக்கப்பட்டன.
திருச்சி மாநகராட்சி  நிர்வாகம் மற்றும் உணவு பாதுகாப்புத்துறையினரால் பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகள்  மற்றும் கிடங்குகளில்  பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 10 லட்சம் மதிப்பிலான 5 டன்  குட்கா உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.  
இவற்றை, நீதிமன்ற உத்தரவுப்படி  அழிக்க, ஆட்சியர் கு. ராசாமணி அறிவுறுத்தினார். அதன்படி இந்த பொருள்களை, மாநகராட்சி அதிகாரிகள் முன்னிலையில்  பஞ்சப்பூர் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு அழிக்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com