திருச்சி ஸ்ரீரங்கம் கோட்டத்தில் முறையாக வரி செலுத்தாத 4 கடைகளை பூட்டி சீல் வைத்து மாநகராட்சி அதிகாரிகள் திங்கள்கிழமை பூட்டி சீல் வைத்தனர்.
ஸ்ரீரங்கம் கோட்டத்துக்குள்பட்ட என்.எஸ்.பி.சாலை, இ.பி.ரோடு பகுதியில் உள்ள நான்கு கடைகள் வாடகை செலுத்தாமல் பயன்படுத்தி வந்தனர். மாநகராட்சி மூலம் வாடகை செலுத்த அறிவிப்புகள் வழங்கப்பட்டும் வரி முறையாக செலுத்தப்படாததால் மாநகராட்சி அதிகாரிகள் மூலம் திங்கள்கிழமை பூட்டி சீல் வைக்கப்பட்டது.