திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் செய்தனர்.
திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் சேதுபதி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த வேண்டும், தனியார் பள்ளிகளில் அதிகக் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், உறையூர் மெதடிஸ்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 7ஆம் வகுப்பு மாணவி தவறி விழுந்த இறந்த சம்பவத்தை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தில் 4 பெண்கள் உள்பட 15 பேர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.