என்ஐடியில் ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் மே 8-இல் தொடக்கம்
By DIN | Published On : 05th May 2019 03:17 AM | Last Updated : 05th May 2019 03:17 AM | அ+அ அ- |

திருச்சி தேசிய தொழில் நுட்பக் கழகத்தில் ஆசிரியர் பயிற்றுனர்களுக்கான பயிற்சி வகுப்பு மே 8ஆம் தேதி தொடங்கி 3 நாள்கள் நடைபெறவுள்ளது.
இது குறித்து தேசிய தொழில் நுட்பக் கழகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு : 21ஆம் நூற்றாண்டு கல்வித் திறன்கள் குறித்த மூன்று
நாள் ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள் திருச்சி தேசிய தொழில் நுட்பக் கழகத்தில் மே 8 ஆம் தேதி தொடங்கி 10 ஆம் தேதி வரையில் 3 நாள்கள் நடைபெறுகிறது.
இந்த வகுப்பிற்கு, இந்திய சமூக அறிவியல் ஆய்வுக் கழகம் (ஐஇநநத), சமூக அறிவியல் பயன்பாட்டுக் கொள்கை ஆராய்ச்சியின் (ஐஙடதஉநந) கீழ் நிதியுதவி வழங்குகிறது.
இதில், சமூகம், தன்னுடைமை மற்றும் அறிவாற்றல் சொந்தத் திறன்கள் குறித்து பயிற்சியளிக்கப்படும். மாறிவரும் கல்விச்சூழலுக்கேற்ப ஆசிரியர்கள் தங்களின் தகுதியையும் ஆற்றலையும் மேம்படுத்திக்கொள்ளும் வகையில் தேவையான மென்திறன்கள் மற்றும் பணியிடத்துக்குத் தேவையான வாழ்வியல் திறன்களையும் அளிப்பதே இப்பயிற்சியின் நோக்கமாகும்.
மேலும், பயிற்சியில் பங்கேற்பது மற்றும் விவரங்களுக்கு வகுப்பு ஒருங்கிணைப்பாளர்களை (எஸ். மேகலா) 0431-2503698, (என். தாமரைச்செல்வன் ) 94437-77217 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம்.