திருச்சி துவாக்குடி செட்டியார் காலனியைச் சேர்ந்தவர் அருள்(37). கூலித் தொழிலாளியான இவர் வெள்ளிக்கிழமை அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேற்கூரை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். பணிகள் முடிந்து இறங்கும் போது மேற்கூரை உடைந்ததில் தவறி விழுந்தார். இதில், தலையில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து துவாக்குடி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.