கூலித் தொழிலாளி தவறி விழுந்து பலி
By DIN | Published On : 05th May 2019 03:16 AM | Last Updated : 05th May 2019 03:16 AM | அ+அ அ- |

திருச்சி துவாக்குடி செட்டியார் காலனியைச் சேர்ந்தவர் அருள்(37). கூலித் தொழிலாளியான இவர் வெள்ளிக்கிழமை அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேற்கூரை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். பணிகள் முடிந்து இறங்கும் போது மேற்கூரை உடைந்ததில் தவறி விழுந்தார். இதில், தலையில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து துவாக்குடி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...