நாளை திருச்சி வானொலி நிலைய 80 ஆம் ஆண்டு விழா

திருச்சி வானொலி நிலையத்தின் 80 ஆம் ஆண்டு விழா வியாழக்கிழமை  (மே 16) நடைபெறுகிறது.

திருச்சி வானொலி நிலையத்தின் 80 ஆம் ஆண்டு விழா வியாழக்கிழமை  (மே 16) நடைபெறுகிறது.
இதுகுறித்து இந்த வானொலி நிலையத்தின் உதவி இயக்குநர் எஸ். பெரியசாமி செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்த ராஜகோபாலச்சாரியாரால் கடந்த 1939 ஆம் ஆண்டு திருச்சி வானொலி நிலையம் தொடங்கப்பட்டது.
5 கிலோ வாட் திறனுடன் ஒலிபரப்பைத் தொடங்கிய இந்த வானொலி நிலையம், தற்போது 100 கிலோ வாட் திறனுடன், உயர்சக்தி நவீனத் தொழில்நுட்பத்துடன் கூடிய பல்வேறு நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது.  இதைத் தவிர ரெயின்போ பண்பலைத் தொடங்கப்பட்டு திரை இசையோடு மக்களை மகிழ்வித்து வருகிறது.
இந்த வானொலி நிலையம் தொடங்கப்பட்டு வியாழக்கிழமையுடன் 80 ஆண்டுகள் நிறைவு பெறுவதால், ஆண்டு விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
புதன்கிழமை காலை 10 மணிக்கு சிறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து 16 ஆம் தேதி நேயர்களோடு நாங்க உள்பட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நிலைய வளாகத்தில் நடைபெறஉள்ளன. மேலும், வானொலி நிலையத்தில் பணியாற்றிய முன்னாள் ஊழியர்கள் தங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ள உள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com