திருச்சியில் ரூ.5.83 லட்சம் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.5.83 லட்சம் மதிப்பிலான தங்கம் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
Updated on
1 min read

திருச்சி விமான நிலையத்தில் ரூ.5.83 லட்சம் மதிப்பிலான தங்கம் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
மலேசிய தலைநகர், கோலாலம்பூரிலிருந்து சனிக்கிழமை திருச்சி வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடைமைகளை, சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது  பயணி ஷேக்மைதீன் (37) உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்ட போது, அவர் தனது உடைமைக்குள் 240 கிராம்  எடையுள்ள ரூ.5.83 லட்சம் மதிப்பிலான தங்கக்கட்டிகளை கடத்தி வந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்து, ஷேக் மைதீனிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com