உப்பிலியபுரம் அருகே மோட்டார் சைக்கிளிலிருந்து தவறி விழுந்தவர் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தார்.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி பாண்டிநகர் எம். கைகாட்டி யோகராஜ் மனைவி சரிதா (28), திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி முரட்டுப்பாளையம் பெருமாள் மனைவி சரசு(40). இவர்கள் இருவரும் துறையூர் வட்டம், கரட்டடியான் கோயில் திருவிழாவில் பங்கேற்பதற்காக, வெள்ளிக்கிழமை இரவு புடலாத்தியில் தம்மம்பட்டி சாலையில் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வெங்கடாசலபுரம் பழனியாண்டி மகன் முருகன் (50) வந்த மோட்டார் சைக்கிள், நின்று கொண்டிருந்த பெண்கள் மீது மோதியது. இதில் முருகன் மோட்டார் சைக்கிளிலிருந்து தவறி விழுந்தார்.
காயமடைந்த மூவரும் துறையூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு முருகன் கொண்டு செல்லப்பட்டார். எனினும், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து உப்பிலியபுரம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.