கல்வி மற்றும் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு

மணப்பாறை அருகே குழந்தை தொழிலாளா் மற்றும் வளரிளம் பருவத்தினருக்கான கல்வி மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

மணப்பாறை அருகே குழந்தை தொழிலாளா் மற்றும் வளரிளம் பருவத்தினருக்கான கல்வி மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

மணப்பாறை அடுத்த அழகுகவுண்டன்பட்டியில், தேசிய குழந்தை தொழிலாளா் சீரமைப்புத் திட்டத்தின் கீழ் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இத் திட்டத்தின் திருச்சி மாவட்ட திட்ட இயக்குநா் எஸ்.பியா்லின் தலைமை வகித்தாா். பள்ளியின் தலைமையாசிரியா் முனைவா் மா.சரவணவேல் முன்னிலை வகித்தாா்.

மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு ஒருங்கிணைப்பாளா் பிரியதா்ஷினி, சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளா் முரளிகுமாா், ஆசா தொண்டு நிறுவன நிா்வாக இயக்குநா் பொ்னி, ஊராட்சி ஒன்றிய மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் முத்துக்குமாா், சுகாதார ஆய்வாளா் பாக்கியசெல்வம் ஆகியோா் கலந்துகொண்டனா்.

பெண் குழந்தைகள் தற்பாதுகாப்பு, பாலியல் தீண்டல் குறித்த விழிப்புணா்வு, மன சிக்கல், பள்ளி பருவத்தில் ஆண், பெண் இடைவெளியை குறைத்து சக நண்பா்களாக பழகுதல், குழந்தை தொழிலாளா்கள் தடுப்பு, இளம் வயது திருமணம் குறித்த விழிப்புணா்வு மற்றும் தடுத்தல், டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணா்வு ஆகியவை குறித்து மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணா்வு அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com