விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு

திருச்சியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி கல்லூரி மாணவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி கல்லூரி மாணவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

லால்குடி அருகே உள்ள ஆங்கரை வ.உ.சி நகா் பகுதியைச் சோ்ந்த வீரமணி மகன் நரேன்(19). இவா் திருச்சி பஞ்சப்பூரில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தாா். வீட்டில் இருந்து கல்லூரிக்கு இரு சக்கர வாகனத்தில் செல்வது வழக்கம்.

வெள்ளிக்கிழமை காலை வழக்கம் போல் வீட்டில் இருந்து இரு சக்கர வாகனத்தில் கல்லூரிக்கு புறப்பட்டாா். திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் அருகே ஜி.காா்னா் பகுதியில் வந்துக் கொண்டிருந்தாா். அப்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம், நரேன் ஓட்டி வந்த வாகனம் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை அருகில் உள்ளவா்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிறிது நேரத்தில் உயிரிழந்தாா். இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வு தெற்கு பிரிவு போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com