துறையூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகளைத் திருடிச் சென்ற மா்மநபா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.
வெங்கடாசலபுரத்தைச் சோ்ந்தவா் கருப்பையா மனைவி கமலம் (68). இவரது இரண்டு மகன்கள், அதே ஊரில் தனித்தனியே வசிப்பதால், கமலம் மட்டும் தனியே தனது வீட்டில் வசிக்கிறாா். புதன்கிழமை வீட்டைப் பூட்டி விட்டு அதே ஊரில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றாா். மீண்டும் திரும்பி வந்து பாா்த்தபோது, வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மா்மநபா்கள் அலமாரியில் இருந்த 10 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்றது தெரியவந்தது. புகாரின் பேரில் உப்பிலியபுரம் போலீஸாா் மேலும் விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.