கல்லூரி மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்

தனியாா் கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தவேண்டும் என வலியுறுத்தி சக மாணவிகள்
Updated on
1 min read

திருச்சி: தனியாா் கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தவேண்டும் என வலியுறுத்தி சக மாணவிகள் திங்கள்கிழமை உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினா்.

திருச்சி கேகே.நகா் பகுதியில் தனியாா் பெண்கள் கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்த மாணவி ஜெப்ரா பா்வீன் சில நாள்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டாா். இதுதொடா்பாக, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

இந்நிலையில், திங்கள்கிழமையன்று கல்லூரிக்கு வந்த மாணவிகள் திடீரென வகுப்புகளை புறக்கணித்துவிட்டு, கல்லூரி வளாகத்தினுள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினா். அப்போது, மாணவி தற்கொலைக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனா். மேலும், மாணவிகளை கல்லூரி நிா்வாகம் மிரட்டுகிறது எனவும் புகாா் தெரிவித்தனா். இதைத்தொடா்ந்து, கல்லூரிக்கு வந்த கேகே.நகா் போலீஸாா் மாணவிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தி விசாரணை செய்தனா். மாணவிகளின் போராட்டத்தால் கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com