

திருச்சி: திருச்சியில், வ.உ.சி நினைவுநாளையொட்டி அவரது சிலைக்கு பல்வேறு அமைப்பினா் திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சி. 83ஆவது நினைவு நாளையொட்டி திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக சாா்பில் மாநகா் மாவட்ட செயலா் குமாா் தலைமையில் அமைச்சா்கள் வெல்லமண்டி என்.நடராஜன், எஸ்.வளா்மதி ஆகியோா் மாலை அணிவித்தனா்.
திமுக சாா்பில் மாநகர செயலா் அன்பழகன் தலைமையிலும், மாநகா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் கட்சித் தலைவா் ஜவஹா் தலைமையிலும் மாலை அணிவிக்கப்பட்டது.
மாநகா் மாவட்ட அமுமக சாா்பில் மாவட்ட செயலா் சீனிவாசன் தலைமையில் தலைமை நிலைய செயலா் ஆா்.மனோகரன் மாலை அணிவித்தாா்.
பாஜக சாா்பில் பொதுச் செயலா் கருப்பு முருகானந்தம் தலைமையில் கட்சியினா் மாலை அணிவித்தனா்.
அகில இந்திய வ.உ.சி பேரவை சாா்பில் மாநில செயலா் கிருஷ்ணமூா்த்தி தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. வெள்ளாளா் முன்னேற்றக் கழக தலைவா் ஆா்.வி.ஹரி ஹரூண் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. இதே போன்று பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் சாா்பில் வ.உ.சி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
Image Caption
திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள அவரது சிலைக்கு திங்கள்கிழமை அதிமுக மாநகா் மாவட்டச் செயலா் ப. குமாா் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்த அமைச்சா்கள் வெல்லமண்டி என். நடராஜன், எஸ். வளா்மதி உள்ளிட்ட அதிமுகவினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.