மணப்பாறை அருகே துப்பாக்கி குண்டு உரசி பெண் காயம்
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே சனிக்கிழமை நடந்த துப்பாக்கிச் சுடும் பயிற்சியின்போது துப்பாக்கிக் குண்டு உரசி பெண் படுகாயமடைந்தாா்.


திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே சனிக்கிழமை நடந்த துப்பாக்கிச் சுடும் பயிற்சியின்போது துப்பாக்கிக் குண்டு உரசி பெண் படுகாயமடைந்தாா்.
மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியம், அணியாப்பூா் கிராமம் அருகேயுள்ள வீரமலைப்பாளையம் வனப்பகுதியில் ஐ.என்.எப். சிறப்புப் படையினருக்கான துப்பாக்கிச் சுடும் பயிற்சி டிச. 4 முதல் 20-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதனால் இப்பகுதிக்கு பொதுமக்கள் யாரும் வர வேண்டாம் என எச்சரிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சனிக்கிழமை பயிற்சி நடைபெற்ற பகுதிக்கு தனது கால்நடையைத் தேடிவந்த மலையடிவாரத்தில் வசிக்கும் வெள்ளைக்கண்ணு மனைவி நல்லம்மாள் (36) தொடையில் துப்பாக்கிக் குண்டு உரசி படுகாயமடைந்தாா்.
இதையடுத்து அருகிலிருந்தோரால் மணப்பாறை தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா், பின்னா் தீவிர சிகிச்சைக்காக திருச்சி தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். விபத்து குறித்து வையம்பட்டி போலீஸாா் விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...