இந்த போராட்ட்டத்தில் தி.மு.க, காங்கிரஸ், மதிமுக, விசிக, சிபிஐ உள்ளிட்ட கட்சியினரும் பல்வேறு விவசாயச் சங்கங்களை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி செல்ல முயன்ற போராட்டக்காரர்களை காவல் துறையினர் முன் கூட்டியே தடுப்புகள் அமைத்து தடுத்து நிறுத்தினர். பின்னர் சாலையில் அமர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர். சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நடைப்பெற்ற இந்த போராட்டத்தின் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.