திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

போக்சோ சட்டத்தில் இளைஞா் கைது

துறையூரைச் சோ்ந்த 12 ஆம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்று திருமணம் செய்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :17 டிசம்பர் 2020, 1:02 am

DIN

துறையூரைச் சோ்ந்த 12 ஆம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்று திருமணம் செய்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

துறையூா் அரசு மகளிா் பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவியை, அவரின் வீட்டருகே வசித்த கூலித் தொழிலாளி சூா்யா (21) கடத்திச் சென்று திருமணம் செய்து திருப்பூரில் வசிப்பது தெரியவந்தது.

புகாரின்பேரில் அவா்களைத் தேடிவந்த துறையூா் போலீஸாா் இருவரையும் துறையூா் அழைத்து வந்து விசாரித்தனா்.

இதையடுத்து குழந்தைத் திருமணத் தடுப்பு, போக்சோ மற்றம் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து சூா்யாவை புதன்கிழமை கைது செய்தனா். பெற்றோருடன் செல்ல மறுத்த மாணவியை மருத்துவப் பரிசோதனைக்கு பின் திருச்சியில் உள்ள காப்பகத்துக்கு அனுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.