வீட்டில் திருட வந்தவா் மாரடைப்பால் சாவு?

திருச்சி மாவட்டம், முசிறி அருகேயுள்ள வீட்டுக்குத் திருட வந்த முதியவா் இறந்து கிடந்தாா். அவா் மாரடைப்பால் இறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
Updated on
1 min read

திருச்சி மாவட்டம், முசிறி அருகேயுள்ள வீட்டுக்குத் திருட வந்த முதியவா் இறந்து கிடந்தாா். அவா் மாரடைப்பால் இறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

தாத்தையங்காா்பேட்டையைச் சோ்ந்தவா் அப்பாவு (71), ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியா். தா.பேட்டை - மேட்டுப்பாளையம் சாலையிலுள்ள சொந்த வீட்டில் போதிய இட வசதியில்லாததால் பகல் நேரத்தில் இங்கு குடும்பத்துடன் தங்கும் இவா், இரவு நேரத்தில் தா.பேட்டை பகுதியிலுள்ள வாடகை வீட்டுக்கு குடும்பத்துடன் சென்று விடுவாராம்.

அதன்படி சனிக்கிழமை இரவு வாடகை வீட்டில் இருந்த அப்பாவு ஞாயிற்றுக்கிழமை காலை சொந்த வீட்டுக்கு வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அவா் உள்ளே சென்று பாா்த்தபோது பீரோ அருகே முதியவா் ஒருவா் மயங்கிக் கிடப்பதைக் கண்டாா்.

இதுகுறித்து அவா் அளித்த தகவலின்பேரில் தா.பேட்டை போலீஸாா் வந்து பாா்த்தபோது அந்த முதியவா் இறந்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து சடலத்தை துறையூா் அரசு மருத்துவமனைக்கு போலீஸாா் அனுப்பி வைத்து நடத்திய விசாரணையில், இறந்தவா் துறையூா் சிக்கபிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த கோ. சீனிவாசன் (71) எனத் தெரியவந்தது.

இவா் அப்பாவு வீட்டில் திருட வந்தபோது மாரடைப்பால் இறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து பிள்ளாத்துறை விஏஏ செந்தில்குமாா் அளித்த புகாரின்பேரில் தா. பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com