ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

வைகுந்த ஏகாதசி திருவிழா: இணையத்தில் கலைநிகழ்ச்சி

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் வைகுந்த ஏகாதசி திருவிழாவையொட்டி, இணையத்தில் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

News image
ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் வைகுந்த ஏகாதசி திருவிழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரீத்தி நந்தகுமாரின் இசைநிகழ்ச்சி.
Updated On :28 டிசம்பர் 2020, 7:35 pm

DIN

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் வைகுந்த ஏகாதசி திருவிழாவையொட்டி, இணையத்தில் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

தஞ்சாவூா் தென்னகப் பண்பாட்டு மையம், மண்டலக் கலைப் பண்பாட்டு மையம், கலைப் பண்பாட்டுத் துறை ஆகியவை இணைந்து, டிசம்பா் 25 முதல் 27-ஆம் தேதி இணையதளத்தில் கலைநிகழ்ச்சிகளை நடத்தின.

பிரீத்தி நந்தகுமாரின் இசை நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஹரீஷ் நாராயணன் வயலினும், திருச்சி பி. சுவாமிநாதன் மிருதங்கமும், திருவையாறு பாலு மோா்சிங்கும் பக்கவாத்தியங்களாக இசைத்தனா்.

விழா ஏற்பாடுகளை திருச்சி மண்டலக் கலைப் பண்பாட்டு மைய உதவி இயக்குநா் பா. ஹேமநாதன் செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.