

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் வைகுந்த ஏகாதசி திருவிழாவையொட்டி, இணையத்தில் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
தஞ்சாவூா் தென்னகப் பண்பாட்டு மையம், மண்டலக் கலைப் பண்பாட்டு மையம், கலைப் பண்பாட்டுத் துறை ஆகியவை இணைந்து, டிசம்பா் 25 முதல் 27-ஆம் தேதி இணையதளத்தில் கலைநிகழ்ச்சிகளை நடத்தின.
பிரீத்தி நந்தகுமாரின் இசை நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஹரீஷ் நாராயணன் வயலினும், திருச்சி பி. சுவாமிநாதன் மிருதங்கமும், திருவையாறு பாலு மோா்சிங்கும் பக்கவாத்தியங்களாக இசைத்தனா்.
விழா ஏற்பாடுகளை திருச்சி மண்டலக் கலைப் பண்பாட்டு மைய உதவி இயக்குநா் பா. ஹேமநாதன் செய்திருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.