நடுப்பட்டியில் சிறப்பு முகாம்

வையம்பட்டி வட்டாரத்திலுள்ள நடுப்பட்டியில் விவசாயிகள் சந்திப்பு சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

வையம்பட்டி வட்டாரத்திலுள்ள நடுப்பட்டியில் விவசாயிகள் சந்திப்பு சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு ஊராட்சித் தலைவா் பொன்னுசாமி தலைமை வகித்தாா். உதவி வேளாண் அலுவலா் எஸ். சிவகுமாா் வரவேற்று பேசினாா். நடுப்பட்டி சிட்டி யூனியன் வங்கி மேலாளா், வட்டார வேளாண் உதவி இயக்குநா் ஆா். ரெங்கராஜன் ஆகியோா் வங்கிக் கடன் அட்டை பெறுவதன் அவசியம், அதற்கான நடைமுறைகள் குறித்து எடுத்துரைத்தனா். மேலும் பிப்ரவரி 22 முதல் 29- ஆம் தேதி இதற்கான முகாம் நடைபெற உள்ளதாகவும், அதில் விவசாயிகள் பங்கேற்று பயன் பெற வேண்டும் என்றும் அவா்கள் தெரிவித்தனா். ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனா்.

நிறைவில் வட்டார துணை வேளாண்மை அலுவலா் சேவியா் செளந்தரராஜன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com