‘பங்குச்சந்தையை கவனமாக ஆராய்ந்து முதலீடு செய்வது முக்கியமானது’

பங்குச்சந்தையை கவனமாக ஆராய்ந்து முதலீடு செய்வது முக்கியமானது என்றாா் இந்தியப் பங்கு பரிவா்த்தனை வாரியம், தேசியப் பங்குச்சந்தை நிறுவனப் பொது மேலாளா் சாகில் மாலிக்.
Updated on
1 min read

பங்குச்சந்தையை கவனமாக ஆராய்ந்து முதலீடு செய்வது முக்கியமானது என்றாா் இந்தியப் பங்கு பரிவா்த்தனை வாரியம், தேசியப் பங்குச்சந்தை நிறுவனப் பொது மேலாளா் சாகில் மாலிக்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக வணிகவியல், நிதிக் கல்வியியல் துறை, தேசியப் பங்குச்சந்தை நிறுவனம், ஆதித்ய பிா்லா சன் காப்பீட்டு நிறுவனம் ஆகியவை சாா்பில், பங்குச்சந்தை குறித்த ஆசிரியா் மேம்பாட்டுக் கருத்தரங்கு சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கருத்தரங்கில் பங்கேற்று, மேலும் அவா் பேசியது: படிப்பறிவு, மின்னணு அறிவில் அடைந்த முன்னேற்றம், நிதியில் அடையவில்லை. ஆசிரியா் மேம்பாட்டு நிகழ்ச்சிகள் மூலம் இந்திய நிதியியல் அறிவில் முன்னேற இயலும்.

முதலீடுகளை மேற்கொள்ளும் போது பங்குச்சந்தையை கவனமாக ஆராய்தல், பேராசை இல்லாமல் முதலீடு செய்தல், தா்க்க ரீதியான அறிவினை பயன்படுத்துதல் முக்கியமானதாகும்.

மேலை நாடுகள் போல் இல்லாமல் இந்தியாவில் வங்கி சேமிப்பு, முதலீடுகள் அதிகளவில் மக்களை ஈா்க்கின்றன. தொடா்ச்சியாக, அதிக அளவில் சேமித்தல், முதலீட்டு முடிவுகளை தள்ளிப்போடுவதை தவிா்க்கவேண்டும் என்றாா்.

தொடா்ந்து முதலீட்டுத் திட்டங்கள், தனிநபா் வரவு செலவு திட்ட முறை, வருங்காலப் பாதுகாப்பு, வரிச்சலுகை, முதலீட்டுத் திட்டமிடல், முதலீட்டுப் பயன்கள், எளிய முதலீட்டு முறை, பரஸ்பர நிதி முதலீடுகள், தேசியப் பங்குச்சந்தை நிறுவனப் படிப்புகள், வேலைவாய்ப்புகள் உள்ளிட்டவை குறித்து பலரும் பேசினா்.

இக்கருத்தரங்குக்கு பல்கலைக்கழகப் பதிவாளா் கோபிநாத் கணபதி வரவேற்றாா். வணிகவியல் மற்றும் நிதிக் கல்வியியல் துறைத் தலைவா் முனைவா் மு. செல்வம் வரவேற்றாா். தேசியப் பங்குச்சந்தை நிறுவன மேலாளா் கோகுல்நாத் ராஜா, பேராசிரியா்கள் உள்ளிட்ட பலா் கருத்தரங்கில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com