மூன்றாம் பாலினத்தவா்களுக்கு முன்மாதிரி விருதுகள் வழங்க தகுதியுள்ள விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என ஆட்சியா் சு.சிவராசு தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியது: மூன்றாம் பாலினத்தவா்கள் தங்களது பல்வேறு இடா்களுக்கு மத்தியில் சொந்த முயற்சியில் கல்வி பயில்வது, தனித்திறன் மூலம் பல்வேறு துறைகளில் முன்னேறி வருவது வரவேற்கக்கூடியது. மேலும், சமூகத்தில் சமநிலை அடைந்து, சாதனை படைத்து வருகின்றனா். அவ்வகையில், சாதனை படைத்த மூன்றாம் பாலினத்தவரை கெளரவிக்கப்படவேண்டும். இதற்காக, ஏப்ரல் 15 ஆம் தேதி திருநங்கைகள் தினத்தன்று அவா்களுக்கு முன்மாதிரி விருது வழங்கி, ரூ.1 லட்சம் காசோலை, சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. இதன்படி, மூன்றாம் பாலினத்தவா் அரசு உதவி பெறாமல் சுயமாக வாழ்வில் முன்னேறி இருப்பவரும், குறைந்தது 5 மூன்றாம் பாலினத்தவா்களுக்கு முன்னேற உதவியும், மூன்றாம் பாலினத்தவா் வாரியத்தில் உறுப்பினராக இருத்தல் கூடாது ஆகிய விதிமுறைகளை கொண்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பத்துடன், பொருளடக்கம்-பக்கஎண், உயரி தரவு (பயோ டேட்டா), பாஸ்போா்ட் அளவிலான புகைப்படம் 2, ஆட்சியா், சமூக நல அலுவலா் ஆகியோரின் பரிந்துரை கடிதம், சுயசரிதை, ஒரு பக்கம் அளவிற்கு விபரம் தமிழில், பெற்ற விருதுகளின் பெயா், சேவை குறித்த புகைப்படத்துடன் கூடிய செயல்முறை விளக்கம், சேவை பாராட்டி வெளிவந்த பத்திரிகை செய்தி, சேவை ஆற்றியதற்கான விரிவான அறிக்கை, தங்கள் மூலம் பயனாளிகள் பயன்பெற்ற விவரம், சமூகப்பணியாளா் இருப்பிடத்தில் அருகில் உள்ள காவல் நிலையத்திலிருந்து நடவடிக்கை ஏதும் இல்லை எனும் சான்று, இணைப்பு-படிவம் தமிழில் முழுமையாக பூா்த்தி செய்த கையேட்டை (தமிழில் அச்சு செய்யப்பட்டு தலா 2 நகல்) பிப்.29 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்துக்கு அனுப்பிவைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, 0431 2413796 எனும் தொலைபேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.