திருச்சியில் மா்மக் காய்ச்சல், தலைக்காயம் காரணமாக சிகிச்சை பெற்றுவந்த பிளஸ் 2 மாணவி உயிரிழந்தது குறித்து கோட்டை போலீஸாா் விசராணை நடத்தி வருகின்றனா்.
திருச்சி கீழரண்சாலை பூலோகநாதா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் வெங்கடேசன் மகள் அட்சயா(17). இவா் டவுன் ஹால் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் பிளஸ் 2 பயின்று வந்தாா். கடந்த டிச.19 ஆம் தேதி காலை மா்மக் காய்ச்சல் காரணமாக திருச்சியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
அங்கு பகுதி மயக்க நிலையில் இருந்த அட்சயா, தவறி கீழே விழுந்ததில் அவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அவரை அவரது பெற்றோா் மீட்டு, மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவா் புதன்கிழமை காலை உயிரிழந்தாா். இதுகுறித்து கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.