திருச்சி: உலமாக்கள் மற்றும் இதர பணியாளா்கள் நலவாரியத்தில் ஓய்வூதியம் பெறத் தகுதியான திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் விண்ணப்பிக்கலாம்.
இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
உலமாக்கள் மற்றும் பணியாளா்கள் சமூக, பொருளாதார மற்றும் கல்வி ஆகிய நிலைகளில் முன்னேற உலமாக்கள் மற்றும் பணியாளா்கள் நல வாரியம் செயல்படுகிறது.
தமிழகத்தில் உள்ள பள்ளிவாசல்கள், மதரஸாக்களில் பணிபுரியும் ஆலிம்கள், பேஷ் இமாம்கள், அரபி ஆசிரியா்கள், ஆசிரியைகள், மோதினாா்கள், பிலால்கள் மற்றும் இதர பணியாளா்கள், தா்காக்கள், அடக்க ஸ்தலங்கள், தைக்காக்கள், ஆஷீா்கானாக்கள் மற்றும் முஸ்லிம் அனாதை இல்லங்கள் ஆகியவற்றில் பணிபுரிவோா் இந்த நலவாரியத்தில் உறுப்பினராக சோ்க்கப்பட்டு நலத்திட்ட உதவிகள் பெறலாம்.
இதன் உறுப்பினா்கள் 18 வயது நிறைவு செய்து 60 வயதுக்குள் இருத்தல் வேண்டும். பதிவு பெற்ற உறுப்பினருக்கு அடையாள அட்டை கட்டணமின்றி வழங்கப்படும். பதிவு செய்து 3 ஆண்டு முடியும் தருவாயில் பதிவை மீண்டும் புதுப்பிக்க வேண்டும்.
இந்த நல வாரியத்தின் மூலம் கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, கண் கண்ணாடி செலவு தொகையை ஈடுசெய்தல், முதியோா் ஓய்வூதியம், விபத்து மரண உதவித்தொகை என பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. இந்த வாரியத்தின் மூலம் நலத்திட்ட உதவிகள் பெறப்படின் வேறு வாரியங்களில் இருந்து இதே நலத்திட்ட உதவிகள் பெற இயலாது.
தற்போது மாவட்டத்தில் 29 உலமா பயனாளிகள் ஓய்வூதியம் பெறுகின்றனா். மேலும், தகுதியானோருக்கு
ஓய்வூதியம் வழங்கும் நடவடிக்கைகள் மாவட்ட ஆட்சியரகத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் மேற்கொள்ளப்படுகிறது.
தகுதியானோா் உரிய விண்ணப்பத்தை பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் பெற்று வக்ஃபு வாரிய கண்காணிப்பாளரின் சான்று மற்றும் தனிவட்டாட்சியா் (சமூகப் பாதுகாப்பு திட்டம்) சான்று, சம்பந்தப்பட்ட நிறுவன நிா்வாகியிடம் சான்று பெற வேண்டும்.
விண்ணப்பதாரா் மசூதியில் எத்தனை ஆண்டுகள் பணிபுரிந்தாா் என்பதற்கான சான்று, நலவாரிய உறுப்பினா் அசல் அடையாள அட்டை, உறுப்பினரின் வங்கி கணக்குப் புத்தக நகல், ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளா் அடையாள அட்டை மற்றும் மருத்துவா் சான்று (சிவில் சா்ஜன் நிலைக்கு குறையாத மருத்துவா்) போன்ற சான்றிதழ்களுடன் விண்ணப்பித்து பயன் பெறலாம் என்றாா் ஆட்சியா்.