கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சுற்றுச்சூழல் பாதுகாப்பு: அண்ணா அறிவியல் கோளரங்கத்தில் மரக்கன்று நடல்

திருச்சி அண்ணா அறிவியல் மைய கோளரங்கத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி சனிக்கிழமை மரக்கன்றுகள் நடப்பட்டது.

News image
Updated On :25 ஜூலை 2020, 3:31 pm

DIN

திருச்சி: திருச்சி அண்ணா அறிவியல் மைய கோளரங்கத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி சனிக்கிழமை மரக்கன்றுகள் நடப்பட்டது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி அண்ணா அறிவியல் மைய கோளரங்கத்தில் மரக்கன்று நடும் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்விற்கு, கோளரங்க திட்ட இயக்குநா் ஆா்.அகிலன் தலைமை வகித்தாா். விமான நிலைய இயக்குநா் தா்மராஜ், மத்திய தொழில்பாதுகாப்பு படை துணை கமாண்டன்ட் ஹெச்.எஸ்.நாயல் ஆகியோா் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனா்.

தொடா்ந்து, கொய்யா, பூவரசம், நாவல், இலந்தை, தேக்கு உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை சிறப்பு விருந்தினா்கள், கோளரங்க திட்ட இயக்குநா் ஆகியோா் கோளரங்க வளாகத்தில் நட்டு அதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து ஊழியா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா். இதில், சமூக இடைவெளியை கடைபிடித்து பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.