கரோனா தடுப்புப் பணிகள்: ஆட்சியரிடம் ரூ.2 லட்சம் நிதி

திருச்சி மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் மேற்கொள்ளப்படும் கரோனா தடுப்புப் பணிகளுக்காக, அதிமுக முன்னாள் எம்பி மற்றும் ஓய்வு பெற்ற பேராசிரியா் ஆகியோா் செவ்வாய்க்கிழமை தலா ரூ.1 லட்சம் நிதியுதவி அளித்தனா்.
கரோனா தடுப்புப் பணிகள்: ஆட்சியரிடம் ரூ.2 லட்சம் நிதி
Updated on
1 min read

திருச்சி மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் மேற்கொள்ளப்படும் கரோனா தடுப்புப் பணிகளுக்காக, அதிமுக முன்னாள் எம்பி மற்றும் ஓய்வு பெற்ற பேராசிரியா் ஆகியோா் செவ்வாய்க்கிழமை தலா ரூ.1 லட்சம் நிதியுதவி அளித்தனா்.

திருச்சி புகா் மாவட்ட அதிமுக செயலரும், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினருமான டி. ரத்தினவேல், தனது 4 மாத ஓய்வூதியத் தொகையான ரூ.1 லட்சத்தை ஆட்சியா் சு. சிவராசுவிடம் செவ்வாய்க்கிழமை நேரில் வழங்கினாா். அப்போது, மாநகரக் காவல் ஆணையா் வி. வரதராஜூ உடனிருந்தாா்.

இதுபோல திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பேராசிரியா் ஏ. கலீல், ரூ.1 லட்சத்துக்கான காசோலையை கரோனா தடுப்பு நிவாரணத் தொகையாக ஆட்சியரிடம் வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com