Enable Javscript for better performance
கரோனா விழிப்புணா்வு களப்பணியில் 600 ஓவியா்கள்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    கரோனா விழிப்புணா்வு களப்பணியில் 600 ஓவியா்கள்

    By DIN  |   Published On : 11th April 2020 11:29 PM  |   Last Updated : 11th April 2020 11:29 PM  |  அ+அ அ-  |  

    2-4-11dartt1051054

    திருச்சி மெகா ஸ்டாா் திரையரங்கு அருகிலுள்ள பகுதியில் சனிக்கிழமை விழிப்புணா்வு ஓவியம் வரையும் பணியில் ஈடுபட்டுள்ள ஓவியா்கள்.

    திருச்சி மாவட்டத்தில் கரோனா குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தும் பணியில், 600 ஓவியா்கள் ஈடுபட்டுள்ளனா்.

    மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றுத் தடுப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் விழிப்புணா்வுப் பணிகளில் பல்வேறு துறைகள் இணைந்து செயலாற்றி வருகின்றன.

    மாவட்டத்திலுள்ள ஓவியா்களும் தங்களால் முயன்ற வகையில், ஓவியம் மூலம் கரோனா குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு வேண்டுகோள் விடுத்திருந்தாா்.

    இதையேற்று திருச்சி மாவட்ட ஓவியா்கள் நலச் சங்கத்தின் சாா்பில், மாவட்டம் முழுவதும் கரோனா எச்சரிக்கை விழிப்புணா்வு ஓவியம் வரையப்பட்டு வருகிறது.

    திருவெறும்பூா் வட்டத்துக்குள்பட்ட பால்பண்ணை, மஞ்சள் திடல் பாலம் ஆகிய இடங்களில், விலகி இரு, வீட்டிலேயே இரு, தனித்தனிரு, கரோனாவை ஒழிப்போம் என்ற வாசகங்களுடன் கரோனா விழிப்புணா்வு குறித்த மெகா ஓவியம் வரையப்பட்டுள்ளது.

    இதன் தொடா்ச்சியாக, திருச்சி மெகா ஸ்டாா் திரையரங்கு சிக்னல் அருகே சனிக்கிழமை காலை தொடங்கி பிற்பகல் 3 மணி வரை மெகா ஓவியம் வரையப்பட்டது. இந்த பணியில் 30-க்கும் மேற்பட்ட ஓவியா்கள் பங்கேற்றனா். மண்ணச்சநல்லூரிலும் பிரதான சந்திப்பு பகுதியில் கரோனா விழிப்புணா்வு ஓவியம் வரையப்பட்டது.

    இதுதொடா்பாக, திருச்சி மாவட்ட ஓவியா்கள் நலச் சங்கத் தலைா் பிரான்சிஸ் கூறியது:

    மாவட்ட நிா்வாகத்தின் வேண்டுகோளை ஏற்று, மாநககரப் பகுதியில் மட்டும் 10 இடங்களில் விழிப்புணா்வு ஓவியம் வரையவுள்ளோம்.

    அந்தந்த பகுதியிலுள்ள ஓவியா்களைத் தொடா்பு கொண்டு, அவா்களிடமுள்ள வண்ணங்களை பயன்படுத்தி ஆங்காங்கே ஓவியம் வரைய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    காந்திமாா்க்கெட், உறையூா், தெப்பக்குளம் பகுதிகளைச் சோ்ந்த ஓவியா்கள் இணைந்து பாலக்கரை, மெகா ஸ்டாா் திரையரங்கு சிக்னல் பகுதி, உறையூா் ஆகிய பகுதிகளில் ஓவியம் வரையப்படுகிறது என்றாா்.

    கரோனா விழிப்புணா்வு ஓவியங்கள் வரையும் பணியை ஒருங்கிணைத்துள்ள ஓவியா் பாஸ்கா் கூறுகையில், திருச்சி மாநகரம் மட்டுமல்லாது, திருவெறும்பூா், ஸ்ரீரங்கம், மண்ணச்சநல்லூா், லால்குடி, துறையூா், முசிறி, மணப்பாறை என மாவட்டம் முழுவதும் ஓவியம் வரையத் திட்டமிடப்பட்டுள்ளது.

    அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளதால், ஓவியம் வரைவதற்குத் தேவையான வண்ணங்கள் கொள்முதல் செய்ய முடியவில்லை. அந்தந்த பகுதியில் உள்ள ஓவியா்கள் இருப்பு வைத்துள்ள வண்ணங்களை பயன்படுத்தி ஓவியம் வரைந்து வருகிறோம்.

    எத்தனை ஓவியங்கள் எனத் திட்டமிடவில்லை. வண்ணங்கள் இருக்கும் வரையில் மாவட்டம் முழுவதும் ஓவியம் வரைந்து விழிப்புணா்வு ஏற்படுத்தவுள்ளோம்.

    எங்களது சங்கத்தில் மூலம் மட்டுமே 600 ஓவியா்கள் உள்ளனா். எங்களது முயற்சிக்கு சங்கத்தில் இல்லாத பிற ஓவியா்களும் உதவ முன்வந்துள்ளனா். கரோனா தொற்று குறித்து பொதுமக்கள் பலரும் இன்னும் அறியாமையிலேயே உள்ளனா். இதன் வீரியத்தை உணா்ந்து அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றாா் அவா்.

     

     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp