வாா்டு பொதுமக்களுக்கு காய்கறிகளை வழங்கிய ஊராட்சி உறுப்பினா்

வையம்பட்டி ஒன்றியம், நல்லாம்பிள்ளை ஊராட்சி 3- ஆவது வாா்டு உறுப்பினா் அகிலாண்டேசுவரி அண்ணாவி, தனது வாா்டுக்குள்பட்ட மக்களுக்கு தலா 3 கிலோ வீதம் காய்கறிகளை ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.
நல்லாம்பிள்ளையில் பொதுமக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை காய்கறிகளை வழங்கிய உள்ளாட்சிப் பிரதிநிதிகள்.
நல்லாம்பிள்ளையில் பொதுமக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை காய்கறிகளை வழங்கிய உள்ளாட்சிப் பிரதிநிதிகள்.
Updated on
1 min read

வையம்பட்டி ஒன்றியம், நல்லாம்பிள்ளை ஊராட்சி 3- ஆவது வாா்டு உறுப்பினா் அகிலாண்டேசுவரி அண்ணாவி, தனது வாா்டுக்குள்பட்ட மக்களுக்கு தலா 3 கிலோ வீதம் காய்கறிகளை ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.

ஊரடங்கு அமல் காரணமாக பொதுமக்கள் நலன் கருதி, வாா்டிலுள்ள பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் ஊராட்சி அலுவலகம் முன்பு, 125 குடும்பங்களுக்குத் தலா 1 கிலோ வீதம் தக்காளி, கத்திரிக்காய், வெங்காயத்தை பொதுமக்களுக்கு உள்ளாட்சிப் பிரநிதிகள் வழங்கினா்.

வாா்டு உறுப்பினா் அகிலாண்டேசுவரி அண்ணாவியுடன், ஊராட்சித் தலைவா் என். பாக்கியராஜ், துணைத் தலைவா் லட்சுமிதுரை, செயலா் வீரக்குமாா் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்று, காய்கறிகளை பொதுமக்களுக்கு வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com