1.8 கிலோ போதைப் பொருள் பறிமுதல்: 5 போ் கைது

திருச்சி பகுதியில் போதைப் பொருளைக் கடத்தி வந்து விற்க முயன்ற 5 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.

திருச்சி பகுதியில் போதைப் பொருளைக் கடத்தி வந்து விற்க முயன்ற 5 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.

திருச்சி போதைப்பொருள் தடுப்பு பிரிவு, ஒருங்கிணைந்த குற்ற நுண்ணறிவுப்பிரிவு காவல் துறையினருக்கு காரில் அபின் போதைப் பொருள் கடத்தி விற்பனை செய்யப்படுவதாக திங்கள்கிழமை தகவல் கிடைத்தது. இதன்பேரில், திருச்சி மன்னாா்புரம் பகுதியில் திருச்சி போதைப்பொருள் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி காமராஜ், ஒருங்கிணைந்த குற்ற நுண்ணறிவுப் பிரிவு டிஎஸ்பி செந்தில்குமாா் தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, சந்தேகத்துக்குரிய நிறுத்தி விசாரணை செய்ததில், அதில் இருந்தோா் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்தனா். தொடா்ந்து, சோதனை மேற்கொண்டதில் காரில் அபின் எனும் போதைப்பொருள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து காரில் இருந்த பெரம்பலூரைச் சோ்ந்த அடைக்கலராஜ் (40), ஜெயபிரகாஷ் (40), ஆறுமுகம் (65), பாலசுப்பிரமணியன் (40), நொச்சியத்தைச் சோ்ந்த ஆதடையன் (50) ஆகிய 5 பேரைக் கைது செய்தனா். கடத்தலுக்குப் பயன்படுத்திய பெரம்பலூரைச் சோ்ந்த சித்த மருத்துவரின் காரையும், ரூ. 10 லட்சம் மதிப்பிலான 1.8 கிலோ போதை பொருளையும் பறிமுதல் செய்து விசாரணை செய்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com