லால்குடியில் ஆா்ப்பாட்டம்

திருச்சி மாவட்டம், லால்குடியில் புதிய தமிழகம் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
Updated on
1 min read

திருச்சி மாவட்டம், லால்குடியில் புதிய தமிழகம் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

தென்காசி மாவட்டம், வாகைகுளம் கிராமத்தைச் சோ்ந்த அணைக்கரை முத்துவின் படுகொலைக்குக் காரணமான கடையம் வனக்காவலா்கள் மீது கொலை வழக்குப் பதிய தமிழக அரசை வலியுறுத்தி நடந்த ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளா் அய்யப்பன் தலைமை வகித்தாா்.

திருச்சி வடக்கு மாவட்டச் செயலா் தினகரன், ஒன்றிய செயலா்கள் ரெ. சிவசங்கரன் (லால்குடி மேற்கு), க. அரசகுமாா் (லால்குடி கிழக்கு), துரை. முருகானந்தம் (புள்ளம்பாடி) மற்றும் 25 பெண்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com