துறையூரில் பருத்தி ஏலம்
By DIN | Published On : 24th December 2020 06:27 AM | Last Updated : 24th December 2020 06:27 AM | அ+அ அ- |

துறையூா் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை 1394.34 குவிண்டால் பருத்தி ஏலத்தில் விற்கப்பட்டது.
பல்வேறு கிராமங்களிலிருந்து 643 விவசாயிகள் 3,381 மூட்டைகளில் கொண்டு வந்த பருத்தியை பெட்டவாய்த்தலை, செம்பனாா்கோவில், மகுடஞ்சாவடி , நாமக்கல், பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வந்த 16 வியாபாரிகள் ஒரு குவிண்டால் பருத்தியை அதிகபட்சமாக ரூ. 6053-க்கு ஏலம் கேட்டனா். நிறைவில் 1394.34 குவிண்டால் பருத்தி ரூ. 76, 18,823க்கு விற்கப்பட்டது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...