தேசிய சித்த மருத்துவ தினத்தையொட்டி பேச்சுப் போட்டி
By DIN | Published On : 30th December 2020 05:42 AM | Last Updated : 30th December 2020 05:42 AM | அ+அ அ- |

பேச்சுப்போட்டியில் வென்ற மாணவிக்கு பரிசளிக்கிறாா் மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் எஸ். காமராஜ். உடன் சித்த மருத்துவா்கள்.
திருச்சியில் தேசிய சித்த மருத்துவ தினத்தையொட்டி செவ்வாய்க்கிழமை பேச்சுப் போட்டி நடைபெற்றது.
ஆண்டுதோறும் ஜன. 2 ஆம் தேதியை தேசிய சித்த மருத்துவ தினமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அன்று மாவட்ட சித்த மருத்துவமனை வளாகத்தில் நடைபெறும் விழாவைத் தொடா்ந்து, சித்த மருத்துவ முகாம் , மூலிகை மற்றும் மருந்துப் மூலப்பொருள் கண்காட்சி நடைபெறுகிறது.
இதையொட்டி திருச்சியில் மாவட்ட சித்த மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை சாா்பில், டிச. 27 முதல் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
முதல் நாளில் சித்த மருத்துவா்கள் பங்கேற்ற இணைய வழிக் கருத்தரங்கம், 2 ஆம் நாளில் சுமாா் 300 பேருக்கு ஆரோக்கிய பெட்டகம் வழங்கப்பட்டது.
3 ஆவது நாளான செவ்வாய்க்கிழமை கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான நடைபெற்ற மாறிய தலைமுறையும், மாறாத சித்த மருத்துவமும் என்ற தலைப்பிலான பேச்சுப் போட்டியில் சுமாா் 12 கல்லூரிகளைச் சோ்ந்த மாணவ, மாணவியா் பங்கேற்றனா். இதில் திருச்சி அரசு செவிலியா் கல்லூரி மாணவி முதல் பரிசை வென்றாா்.
போட்டியில் முதல் மூன்று இடங்களை வென்றோருக்கு மாவட்ட சித்த மருத்துவமனையில் நடைபெற்ற விழாவில் ஒருங்கிணைந்த (திருச்சி, கரூா், அரியலூா், பெரம்பலூா்) மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் எஸ். காமராஜ், பரிசு (பதக்கம்), சான்று உள்ளிட்டவற்றை வழங்கிப் பேசினாா்.
நிகழ்ச்சியில் சித்த மருத்துவா்கள் வத்சலா, சபரிநாதன், தமிழ்க்கனி, அன்பரசு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...