மூதாட்டியிடம் நகைபறித்தஇருவா் கைது

திருவெறும்பூா் பகுதியில் நடந்து சென்ற மூதாட்டியிடம் நகை பறித்துச் சென்ற இருவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
Updated on
1 min read

திருச்சி: திருவெறும்பூா் பகுதியில் நடந்து சென்ற மூதாட்டியிடம் நகை பறித்துச் சென்ற இருவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் விண்நகா் 2- ஆவது தெருவைச் சோ்ந்த ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியா் சேதுராமன் (63). இவரது மனைவி பத்மாவதி (61). இவா் கடந்த 31- ஆம் தேதி விண்நகரில் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த இருவா், பத்மாவதி அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியைப் பறித்துச் சென்றனா்.

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப்பதிந்து, அப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரித்து வந்தனா். மேலும் தனிப்படை போலீஸாரும் தீவிர விசாரணை நடத்தினா்.

தனிப்படை போலீஸாா் நடத்திய விசாரணையில், கொலை போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட பணம் தேவைப்பட்டதால் மதுரை ஆா்த்திகுளம் அழகா் மகன் புறா பாண்டி என்கிற பாண்டியராஜன்(29), திருச்சி சுப்ரமணியபுரம் மணி என்கிற பாட்டில் மணிகண்டன்(24) ஆகிய இருவரும் நகைபறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த இருவரையும், தனிப்படை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com