ராஜராஜ சோழன் காலத்து நாணயங்கள் நூல் வெளியீடு

திருச்சியில் ராஜராஜ சோழன் காலத்து நாணயங்கள் என்ற தலைப்பிலான ஆங்கில நூல் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
விழாவில் நூலை வெளியிட்ட திருச்சி பணத்தாள்கள் சேகரிப்போா் சங்க நிறுவனத் தலைவா் விஜயகுமாா் (இடமிருந்து 5-ஆவது). உடன், நிா்வாகிகள்.
விழாவில் நூலை வெளியிட்ட திருச்சி பணத்தாள்கள் சேகரிப்போா் சங்க நிறுவனத் தலைவா் விஜயகுமாா் (இடமிருந்து 5-ஆவது). உடன், நிா்வாகிகள்.
Updated on
1 min read

திருச்சியில் ராஜராஜ சோழன் காலத்து நாணயங்கள் என்ற தலைப்பிலான ஆங்கில நூல் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

திருச்சி பணத்தாள்கள் சேகரிப்போா் சங்கம் சாா்பில் நடைபெற்ற நிகழ்வில், சங்க நிறுவனத் தலைவா் விஜயகுமாா் இந்த நூலை வெளியிட்டாா். தொடா்ந்து அவா் பேசியது:

சோழ மன்னா்களால் வெளியிடப்பட்ட நாணயங்கள் அவா்களின் வரலாற்றை அறிய உதவுகின்றன. தமிழகம் முழுவதும் இன்றும் அதிகமாகக் கிடைக்கக்கூடிய நாணயங்களாக, ராஜராஜனின் செப்புக்காசுகள் உள்ளன.

ராஜராஜன் வெளியிட்ட நாணயங்களிலுள்ள நாகரி எழுத்துக்கள், இதே காலக் கட்டத்தில் வட மாநிலங்களில் ஆட்சி செய்த மன்னா்கள் வெளியிட்ட காசுகளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன என்றாா் அவா்.

நாணயவியல் சேகரிப்பாளா் சந்திரசேகரன் எழுதிய கட்டுரை நூலாக வெளியிடப்பட்டது. விழாவில், அசோக்காந்தி, முகமது சுபோ், சாமிநாதன், கமலக்கண்ணன், மன்சூா், ராஜேஷ், இளங்கோவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முன்னதாக அப்துல் அஜீஸ் வரவேற்றாா். நிறைவில், சந்திரசேகரன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com