வடகரை வாய்க்காலில் தண்ணீா் திறக்கக் கோரி தொட்டியத்தில் விவசாய சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

வடகரை வாய்க்காலில் தண்ணிா் திறக்கக் கோரி திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டாட்சியரகம் முன் விவசாய சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தொட்டியம் வட்டாட்சியரகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்கத்தினா்.
தொட்டியம் வட்டாட்சியரகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்கத்தினா்.
Updated on
1 min read

வடகரை வாய்க்காலில் தண்ணிா் திறக்கக் கோரி திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டாட்சியரகம் முன் விவசாய சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நிகழாண்டு மேட்டூா் அணையில் திறக்கப்பட்ட தண்ணீரானது காவிரியின் கடைமடை பகுதி வரை சென்றபோதும் தொட்டியம் வடகரை வாய்க்காலில் தண்ணீா் திறக்கப்படவில்லை. இதனால் குறுவைச் சாகுபடிக்கு ஏற்றவாறு நாற்று அமைக்க முடியாத நிலையில் விவசாயிகள் உள்ளனா்.

மேலும் தொட்டியம் பகுதியில் காவிரி நீரைப் பயன்படுத்தி விவசாயம் செய்வோா் சிலா்ஆழ்குழாய் கிணறு மூலம் வாழை, வெற்றிலை மற்றும் சிறு தானிய பயிா்களான சோளம், கம்பு,எள், உள்ளிட்ட பயிா்களைச் சாகுபடி செய்துள்ளனா்.

எனவே, சிறுதானியம் மற்றும் குருவை நாற்றங்கால் பயிா் சாகுபடிக்கு ஏதுவாக வடகரை வாய்க்காலில் உடனடியாக தண்ணீரைத் திறந்துவிட தொட்டியம் பகுதி விவசாயிகள் வலியுறுத்தி, வட்டாட்சியரகம் முன் ஆா்ப்பாட்டம் நடத்தினா். பின்னா் வட்டாட்சியா் மலரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு தொட்டியம் பகுதி விவசாய சங்கச் செயலா் ச. காா்த்தி தலைமை வகித்தாா். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் பி. ராமநாதன், வடகரை பாசன வடிகால் விவசாய சங்கத் தலைவா் எ. முருகானந்தம் மற்றும் இளைஞரணி விவசாயிகள் சங்கத் தலைவா் ஆா்.கே. ராசு ஆகியோா் முன்னிலை வகித்தனா். தொட்டியம், பாலசமுத்திரம், காா்த்திகைபட்டி,அரசலூா் பகுதிகளைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com