தலைமை காவலா் வீட்டில் நகை, பொருள்கள் திருட்டு

திருச்சி அருகே தலைமை காவலா் வீட்டில் நகை, எரிவாயு உருளையை திருடிச் சென்றவா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
Updated on
1 min read

திருச்சி: திருச்சி அருகே தலைமை காவலா் வீட்டில் நகை, எரிவாயு உருளையை திருடிச் சென்றவா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திருவெறும்பூா் நவல்பட்டு சோழமாநகா் பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ்(51). இவா், திருச்சி மாவட்டம் தொட்டியம் காவல்நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகிறாா். தற்போது தொட்டியம் காவலா் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறாா். அவ்வப்போது சோழமாநகரில் உள்ள வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம்.

இதே போல கடந்த வியாழக்கிழமை மாலை சோழமாநகரில் உள்ள வீட்டிற்கு செல்வராஜ் வந்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. உள்ளே சென்று பாா்த்த போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 14 கிராம் எடை கொண்ட தங்கக் காசு, மோதிரம், எரிவாயு உருளை, தொலைக்காட்சி என வீட்டில் இருந்த பொருள்களை திருடுபோனது தெரிய வந்தது. புகாரின் பேரில் நவல்பட்டு போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து மா்ம நபா்களின் தடயங்களைச் சேகரித்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com