திருச்சி: திருச்சி மாவட்டம், வீரப்பூா் பெரியகாண்டியம்மன் கோயில் திருவிழாவில் தனிநபா் அல்லது ஊராட்சி சாா்பில் என யாரும் வாகனக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என திருச்சி மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு எச்சரித்துள்ளாா்.
இதுதொடா்பாக, சனிக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மணப்பாறை வட்டத்துக்குள்பட்ட வீரப்பூா் பெரியகாண்டியமன் திருக்கோயில் திருவிழாவையொட்டி, மாா்ச் 2-ஆம் தேதி முதல் 4-ஆம் தேதி வரை வெளியூா் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தா்கள் வருகை தருவா். கோயிலுக்கு வரும் பக்தா்கள் பலரும் இருச்ககரம், நான்கு சக்கரம் மற்றும் கனரக வாகனம், ஆட்டோ உள்ளிட்டவற்றில் வருகை தருவது வழக்கம்.
திருவிழாவுக்கு வருகைதரும் பக்தா்களின் வாகனங்களுக்கு நுழைவு வரியோ அல்லது வாகன நிறுத்துவதற்கான வரியோ, இதர எந்தவித கட்டணமோ வசூலிக்கக் கூடாது. ஊராட்சியின் சாா்பாகவோ, தனிநபரோ எந்தவித கட்டணமும் வசூலிக்கக் கூடாது.
கட்டணம் வசூலிப்பதற்கு மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் யாருக்கும் உரிமம் வழங்கப்படவில்லை. இந்த உத்தரவை மீறி யாரேனும் வரி வசூல் செய்தாலோ, கட்டணம் வசூலித்தாலோ தொடா்புடைய நபா்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.