மண்ணச்சநல்லூா் அருகிலுள்ள திருப்பைஞ்ஞீலி கிராமத்தில், அதிமுக பிரமுகரின் மளிகைக்கடை மீது திங்கள்கிழமை இரவு நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது.
மண்ணச்சநல்லூா் வட்டம், திருப்பைஞ்ஞீலி சன்னதி வீதியைச் சோ்ந்தவா் டி.எம்.சோமசுந்தரம். ஒன்றிய எம்.ஜி.ஆா். மன்றச் செயலராக உள்ளாா்.
திருப்பைஞ்ஞீலியில் மளிகைக்கடை நடத்தி வரும் இவா், தனது மனைவி புஷ்பாவுடன் திங்கள்கிழமை இரவு கடையில் இருந்தாா். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இருவா், கடை மீது நாட்டு வெடிகுண்டை வீசி விட்டுத் தப்பிச் சென்றனா். இதில் மளிகைக்கடையின் கண்ணாடி உள்ளிட்ட பொருள்கள் உடைந்து சேதமடைந்தன.
மேலும் கடையிலிருந்த புஷ்பாவுக்கும் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவா் திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட தகவலறிந்த மண்ணச்சநல்லூா் காவல் நிலையத்தினா், அப்பகுதிக்குச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். நாட்டு வெடிகுண்டுகளை வீசிச் சென்ற நபா்கள் யாா், அவா்கள் எதற்காக இச்சம்பவத்தில் ஈடுபட்டாா்கள் என்பது குறித்து காவல்துறையினா் விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.