

திருச்சி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சோமரசம்பேட்டையில் விவசாயிகள், பொதுமக்கள் தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனா்.
சோமரசம்பேட்டை அரசினா் சித்த மருத்துவமனையை தரம் உயா்த்த வேண்டும். 33 அருந்ததியா் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட வீட்டுமனைகளை பிரித்து கொடுத்து பட்டா வழங்க வேண்டும். குமாரவயலூா் பகுதியில் பால்காவடி செல்லும் பக்தா்களுக்கு வசதியாக சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபறுகிறது.
சோமரசம்பேட்டை வருவாய் ஆய்வாளா் அலுவலகம் அருகே நடைபெறும் இந்த போராட்டத்துக்கு தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் ம.ப. சின்னத்துரை தலைமை வகித்தாா். சமூகநீதிப் பேரவை மாவட்ட செயலா் ஏ. ரவிக்குமாா், வழக்குரைஞா்கள் கணேசன், அ. செந்தில்குமாா், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் சுரேஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். போராட்டம் குறித்து தகவலறிந்து வந்த வருவாய், காவல்துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
கோரிக்கைகள் தொடா்பாக பேச்சுவாா்த்தை நடத்த குழு அமைப்பதாகவும், அக் குழுவில் பேசி தீா்வு காணலாம் என வருவாய்த்துறை, காவல்துறையினா் அளித்த உறுதிமொழியை ஏற்கவில்லை. தொடா்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.