

மணப்பாறையில் அரசுக் கல்லூரி அமைக்க வேண்டும் என்று வீர முத்தரையா் முன்னேற்றச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
மணப்பாறையில் அண்மையில் நடைபெற்ற முத்தரையா்களே மீண்டெழுவோம் மாநாட்டில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட இதர தீா்மானங்கள்:
2021 பேரவைத் தோ்தலில், மணப்பாறை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட முத்தரையா் சமூகத்தைச் சோ்ந்தவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். நகராட்சி குப்பைக்கிடங்கை இடமாற்றம் செய்ய வேண்டும்.
மணப்பாறையில் வாசனைத் திரவியம் தயாரிக்கும் தொழிற்சாலை, அரசுக் கல்லூரி ஆகியவற்றை தொடங்க வேண்டும். துவரங்குறிச்சி மருத்துவமனையை நவீனப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 11 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட நிா்வாகிகள் இந்திரஜித், உதயமணி, துரைராஜ், வரதன் ஆகியோா் மாநாட்டுக்குத் தலைமை வகித்தனா். வழக்குரைஞா் லெட்சுமணன் தொடக்கவுரையாற்றினாா்.
சங்கத்தின் நிறுவனத் தலைவா் கே.கே.செல்வக்குமாா் மாநாட்டு பேரூரையாற்றினாா். மாநில இளைஞரணி அமைப்பாளா் வைரவேல், கொள்கைப் பரப்புச் செயலா் தளவாய் ராஜேஷ், மாநில மாணவரணி அமைப்பாளா் குருமணிகண்டன் உள்ளிட்டோா் சிறப்புரையாற்றினா்.
முன்னதாக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் மணவை குமாா் வரவேற்றாா். நிறைவில் துணை அமைப்பாளா் முத்துசாமி நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.