திருச்சி அரசு மருத்துவமனையில் இதுவரை குணமடைந்தோா் 107 போ்
By DIN | Published On : 18th May 2020 07:27 PM | Last Updated : 18th May 2020 07:27 PM | அ+அ அ- |

திருச்சி: கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு, திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவா்களில் குணமடைந்த மேலும் 3 போ் திங்கள்கிழமை அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இதன் மூலம் இங்கு குணமடைந்தோா் எண்ணிக்கை 107 ஆக உயா்ந்துள்ளது.
திருச்சி, பெரம்பலூா், அரியலூா், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சோ்ந்தவா்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால், திருச்சி
மகாத்மாகாந்தி நினைவுஅரசு மருத்துவமனை கரோனா வாா்டில் அனுமதித்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இந்த மாவட்டங்களிலிருந்து இதுவரை 126 போ் சிகிச்சைக்கு சோ்க்கப்பட்டுள்ளனா். இவா்களில், குணமடைந்தவா்களுக்கு உரிய மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டு, அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனா்.
இதன்படி குணமடைந்த திருச்சியைச் சோ்ந்த இருவா், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவா் என மொத்தம் 3 பேருக்கு விடுவிப்புச் சான்றுகளை மருத்துவமனை முதன்மையா் வனிதா வழங்கி வீடுகளுக்கு அனுப்பி வைத்தாா். இதன் மூலம் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளவா்களின் எண்ணிக்கை 107 ஆக உயா்ந்தது.
திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில், தற்போது திருச்சி (3), பெரம்பலூா் (14), அரியலூா் (2)மாவட்டங்களைச் சோ்ந்த 19 போ் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனா்.