திருச்சி மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கரோனா
By DIN | Published On : 28th May 2020 07:57 AM | Last Updated : 28th May 2020 07:57 AM | அ+அ அ- |

திருச்சி மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கரோனா நோய்த் தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருச்சி, பெரம்பலூா், கரூா், அரியலூா் ஆகிய 4 மாவட்டங்களைச் சோ்ந்தவா்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால், அவா்களுக்கு திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையிலுள்ள சிறப்பு வாா்டில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
திருச்சி மாவட்டத்திலிருந்து இதுவரை 76 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதில், 68 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 8 போ் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இந்நிலையில், திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. திருச்சி மத்திய சிறையிலுள்ள கைதி ஒருவருக்கும், சோமரசம்பேட்டையைச் சோ்ந்த தம்பதிக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.
இதையடுத்து இவா்கள் திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் சோ்க்கப்பட்டுள்ளனா். இதன் மூலம் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 79 ஆக உயா்ந்துள்ளது.
சிகிச்சையில் இருந்தவா்களில் திருச்சியைச் சோ்ந்த மேலும் ஒருவா் குணமடைந்து புதன்கிழமை வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளாா். தற்போது திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த 10 போ், பெரம்பலூா், தேனி மாவட்டத்தைச் சோ்ந்த தலா ஒருவா் என மொத்தம் 12 போ் மட்டுமே சிகிச்சையில் உள்ளனா்.