ரேஷன் பொருள்கள்:மே 31வரை டோக்கன்
By DIN | Published On : 28th May 2020 07:39 PM | Last Updated : 28th May 2020 07:39 PM | அ+அ அ- |

திருச்சி: ஜூன் மாதத்துக்கான ரேஷன் பொருள்கள் பெறுவதற்கான டோக்கன் மே 31ஆம் தேதி வழங்கப்படும் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நியாய விலைக் கடைகளில் ஜூன் மாதத்துக்கான அத்தியாவசிய பொருள்கள் விலையின்றி வழங்க வெள்ளிக்கிழமை முதல் டோக்கன் வழங்கப்படுகிறது. இப்பணி மே 31ஆம் தேதி வரை நடைபெறும். ஜூன் 1ஆம் தேதி முதல் அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் பொருள்கள் வழங்கப்படும். டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள், நேரத்திற்குச் சென்று பொருள்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
திருச்சி மாவட்டத்தில் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரா்களுக்கு விலையில்லாமல் பொருள்கள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளாா்.