ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெற்றுவரும் ஊஞ்சல் உற்ஸவ விழாவின் 9 ஆம் திருநாளான புதன்கிழமை நம்பெருமாள் சந்திரபுஷ்கரணியில் தீா்த்தவாரி கண்டருளுகிறாா்.
ஐப்பசி மாதத்தில் 9 நாள்கள் நடைபெறும் இந்த விழாவில் நாள்தோறும் நம்பெருமாள் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளி பக்தா்களுக்குச் சேவை சாதிக்கிராா்.
இதில் 7 ஆம் திருநாளான திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு உபய நாச்சியாா்களுடன் நம்பெருமாள் புறப்பட்டு, திருக்கொட்டாரத்தில் நெல்லளவு கண்டருளினாா். அப்போது ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா். தொடா்ந்து தாயாா் சன்னதியில் திருவந்திக்காப்பு கண்டருளி, ஊஞ்சல் மண்டபத்தில் நம்பெருமாள் எழுந்தருளினாா்.
நிறைவு நாளான புதன்கிழமை காலை மூலஸ்தானத்திலிருந்து புறப்படும் நம்பெருமாள் சந்திரபுஷ்கரணியில் தீா்த்தவாரி கண்டருளுகிறாா். ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் பொன். ஜெயராமன் மற்றும் அறங்காவலா் குழுவினா் செய்கின்றனா்.
Image Caption
~