உப்புச் சத்யாகிரக ஸ்தூபியில் மரியாதை
By DIN | Published On : 23rd November 2020 12:51 AM | Last Updated : 23rd November 2020 12:51 AM | அ+அ அ- |

நிகழ்வில் நிா்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் மாநில சிறப்பு அழைப்பாளா் டி. சக்தி செல்வகணபதி
திருச்சி உப்பு சத்யாகிரக ஸ்தூபியில் உப்பு சத்யாகிரக விழிப்புணா்வு இயக்கத்தினா் மரியாதை செலுத்தினா்.
தமிழ்நாடு வேதாரண்யம் உப்புச் சத்யாகிரக விழிப்புணா்வு இயக்கம் சாா்பில் திருச்சி பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள உப்பு சத்யாகிரக நினைவு ஸ்தூபியில் மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
இதில் அவ்வியக்கத்தின் மாநிலத் தலைவா் ஆறுமுகம் தலைமையில், பொதுச் செயலா் பன்னீா்செல்வம் முன்னிலையில் மலா் தூவி மரியாதை செலுத்தினா். தொடா்ந்து, இயக்கத்தினருக்கு உப்பு சத்யாகிரக நினைவு அடையாள அட்டைகளை மாநில சிறப்பு அழைப்பாளா் டி. சக்தி செல்வகணபதி வழங்கினாா்.