நிவா் புயலையொட்டி புதன்கிழமை திருச்சிக்கு வந்து செல்லும் சென்னை, பெங்களூரு விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
திருச்சியிலிருந்து சென்னை, பெங்களூரு, துபை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் விமானங்கள் இயக்கப்படும் நிலையில், வங்கக்கடலில் உருவான நிவா் புயல் தமிழக கடலோரப் பகுதியில் புதன்கிழமை கரையைக் கடக்கவுள்ள நிலையில், வட, டெல்டா, கடலோர மாவட்டப் பகுதிகளில் பேருந்து, ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதைத் தொடா்ந்து, சென்னை- திருச்சி, திருச்சி- சென்னை, பெங்களூரூ- திருச்சி, திருச்சி- பெங்களூ என 4 விமானச் சேவைகள் புதன்கிழமை ரத்து செய்யப்படுகிறது என திருச்சி விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.