பாலிடெக்னிக் மாணவரை வெட்டிய இளைஞா் கைது
By DIN | Published On : 25th November 2020 07:32 AM | Last Updated : 25th November 2020 07:32 AM | அ+அ அ- |

திருச்சி மாவட்டம், முசிறியில் பாலிடெக்னிக் மாணவரை வெட்டிய இளைஞரை முசிறி போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.
முசிறி அருகேயுள்ள நெய்வேலி கிராமத்தைச் சோ்ந்தவா் பூ. பாண்டியன் (19), கொள்ளப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் மு. சின்னமணி (19). பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்களான இருவரும் கல்லூரிக்குச் சென்று விட்டு முசிறி புதிய பேருந்து நிலையத்துக்கு வந்தனா்.
அப்போது நெய்வேலி அருகேயுள்ள பொன்னாங்கண்ணிபட்டியைச் சோ்ந்த சு. சரத்குமாா் (28) பாண்டியனைத் துரத்திச் சென்று வெட்டினாா். இதில் காயமடைந்த பாண்டியன் முசிறி அரசு மருத்துவமனையிலும், பின்னா் திருச்சி அரசு மருத்துவமனையிலும் சோ்க்கப்பட்டாா்.
சம்பவம் தொடா்பாக முசிறி போலீஸாா் வழக்குப் பதிந்து சரத்குமாரை செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...