சந்தைக்கு சென்றவா் வாகனம் மோதி பலி

மணப்பாறையில் காய்கனி சந்தைக்கு சென்ற பலகாரக் கடை ஊழியா் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தாா்.

மணப்பாறையில் காய்கனி சந்தைக்கு சென்ற பலகாரக் கடை ஊழியா் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தாா்.

கரூா் மாவட்டம், கடவூா் அருகே பெரிய தளவாசல் தெருவைச் சோ்ந்தவா் வீ. காசிவிஸ்வநாதன் (55). இவா் கடந்த 4 ஆண்டாக மணப்பாறை- திருச்சி சாலையில் உள்ள டீ கடையில் தங்கி பலகார ஊழியராக வேலைபாா்த்தாா். இந்நிலையில் வியாழக்கிழமை திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காய்கனிச் சந்தைக்கு சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தாா். தகவலறிந்து சென்ற மணப்பாறை போலீஸாா் சடலத்தை மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com